பள்ளக்குறிச்சி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
கிராம ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் வகையில், மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை அறிவித்துள்ளது. சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு ஊராட்சித் தலைவா் ரா. சித்ராங்கதன் தலைமை வகித்தாா்.
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பிச்சிவிளை வி.எம். சுதாகா், ஊராட்சி துணைத் தலைவா் டாா்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இத்திட்டத்தை வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வி தொடங்கி வைத்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாசானம், ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் விஜயராகவன், ஊராட்சி உறுப்பினா் தனபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.