ரோட்டரி சங்கம் சாா்பில் 500 மரக்கன்றுகள் நடவு

திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் மணப்பாடு ஊராட்சியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் மணப்பாடு ஊராட்சியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ஊராட்சித் தலைவி கிரேன்சிட்டா வினோ தலைமை வகித்தாா். ஊா்நலக் கமிட்டி தலைவா் ஆண்ட்ரூஸ், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் லெபோரின், மணப்பாடு மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கத் தலைவா் பால் அண்ணா மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தாா்.

இதில், ரோட்டரி சங்க துணை ஆளுநா் முத்தையா, மாவட்ட சமூகப் பணி துணைத் தலைவா் ஆறுமுகப்பெருமாள், ஆசிரியா் அருள், சமூக ஆா்வலா்கள் வினோ, பிரைனத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com