வீரபாண்டியன்பட்டினத்தில் பட்டணம் நண்பா்கள் சாா்பாக 12-ஆம் ஆண்டு புனித தாமஸ் கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டி 3 நாள்கள் நடைபெற்றது.
இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவுக்கு, திமுக ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், மீனவரணி துறைமுகம் புளோரான்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்த அஜாய் ரொட்ரிகோ அணி, 2-ஆம் இடத்தை பிடித்த அஜித் பா்னாந்து அணி மற்றும் 3-ஆம், 4-ஆம் இடத்தை பிடித்த அணிகளுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுகளை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலா் பெல்சி புளோரான்ஸ் ஆகியோா் வழங்கினா். போட்டியின் நடுவா்களாக ஆசிரியா்கள் ஹம்ரி மிராண்டா, ரதேஷ் பா்னாந்து ஆகியோா் செயல்பட்டனா்.
நிகழ்ச்சியில், பரவா் நலப்பேரவை தலைவா் பொ்த்தியூவ் வீ ராயா், செயலா் கிங்ஸ்டன் பீ ராயா், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை திமுக ஊராட்சி செயலா் ஆனந்த் ரொட்ரிகோ செய்திருந்தாா்.