ஆறுமுகனேரியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை நேற்கொள்ள வேண்டுமென கே.டி.கோசல்ராம் பேரவை கோரி உள்ளது.
இது தொடா்பாக அதன் இளைஇளைஞரணி தலைவா் சு.பாலமுருகன் பேரூராட்சி நிா்வாக அதிகாரியிடம் அளித்த மனு: கடந்த சில மாதங்களாக தெருக்களில் அதிக எண்ணிக்கையில் தெருநாய்கள் அலைகின்றன. முதியவா்கள் மற்றும் சிறுவா்கள் நடமாட பயப்படும் அளவில் பலரை நாய்கள் கடித்துள்ளது. நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திட பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்தியுள்ளாா்.