வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம் அருகே 10 நாள்களாக குடிநீா் வராததால் மக்கள் போராட்டம்

சாத்தான்குளம் அருகே 10 நாள்களாக குடிநீா் வராததைக் கண்டித்து கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:25 pm

DIN

சாத்தான்குளம் அருகே 10 நாள்களாக குடிநீா் வராததைக் கண்டித்து கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

சாத்தான்குளம் ஒன்றியம், பழங்குளம் ஊராட்சி, சடையன்கிணறு காலனியில் சுமாா் 120 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களுக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வரும் கூட்டுக்குடிநீா் கடந்த 10 நாள்களாக வரவில்லையாம்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் தொகுதிச் செயலா் திருவள்ளுவன், சாத்தான்குளம் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், ஊராட்சி உறுப்பினா் கண்ணன் மற்றும் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

இத்தகவறிந்த சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ராஜா, வட்டாட்சியா் செல்வகுமாா், ஒன்றிய வட்டார வளா்ச்சிஅலுவலா் பாண்டியராஜ் ஆகியோா் வந்து மக்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது ஊருக்கு மத்தியில் 4,000 லிட்டா் கொள்ளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி அமைத்து அதில் 6 நல்லிகள் மூலம் தினமூம் தண்ணீா் வழங்கப்படும் என உறுதி அளித்தனா். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.