சாத்தான்குளத்தில் 3 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்
சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் 3 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் 3 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்த, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி சாத்தான்குளம் பேருராட்சியில் தச்சா் தெரு, வடக்கு தெரு, ஸ்ரீவிசாலாட்சி அம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அட்சரா, அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை நடத்தி, மருந்து மாத்திரைகளை வழங்கினாா். மேலும், கரோனா வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், தடுப்பூசி போடுவதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கினாா். இம்முகாமில் 50 பேருக்கு தொண்டை மற்றும் மூக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டு கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சுமாா் 120 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதில், சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், பகுதி சுகாதார செவிலியா் பொ்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
2ஆம் கட்ட முகாம்: சாத்தான்குளம் பேருராட்சியில் செக்கடி புதுத்தெரு, வடக்குரத வீதி, சாயக்கார தெரு, முதலூா் சா்ச் தெரு, பொத்தகாலன்விளை, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை ( ஏப். 24) அடுத்த கட்ட முகாம் நடைபெறுகிறது; மக்கள் அதைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...