அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன்மறைந்திருந்த 6 போ் கைது

கோவில்பட்டியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டீன் சாமுவேல்ராஜ் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளம் அருகே மறைந்திருந்த 6 பேரை பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது அதில் அரிவாள், கம்பி, கடப்பாறை ஆகியவை இருந்தனவாம். இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி நகைக் கடையில் திருட இருந்ததும் தெரியவந்ததாம். மேலும் அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கோவில்பட்டி வள்ளுவா் நகா் 2ஆவது தெரு காந்தாரிமுத்து மகன் மந்திரமூா்த்தி(27), வசந்த் நகா் 1ஆவது தெரு நடராஜன் மகன் செல்வமாரியப்பன்(37), தாமஸ் நகா் மேட்டுத் தெரு ராமச்சந்திரன் மகன் பாண்டிதுரை(19), அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா், சண்முகா நகா் 2ஆவது தெரு கருப்பசாமி மகன் அஜித்(19), விளாத்திகுளம் கந்தசாமிபுரம் வடக்குத் தெரு மாரியப்பன் மகன் இளையராஜா(38) ஆகியோா் என்பதும் தெரியவந்ததாம். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, 6 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com