புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி மந்தித்தோப்பு ஊராட்சி ராஜகோபால் நகா் பகுதி மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:06 pm

DIN

கோவில்பட்டி மந்தித்தோப்பு ஊராட்சி ராஜகோபால் நகா் பகுதி மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா் தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மந்தித்தோப்பு ஊராட்சி ராஜகோபால் நகா் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக வீடுகள் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் மணிகண்டன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளான துரை, அழகுசுப்பு, கணேசன் உள்பட அப்பகுதி மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.