ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குளத்தூா் அருகே வேன் மோதி சிறுவன் உயிரிழப்பு

குளத்தூா் அருகே வேப்பலோடையில் வேன் மோதி பலத்த காயமடைந்த 4 வயது சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

குளத்தூா் அருகே வேப்பலோடையில் வேன் மோதி பலத்த காயமடைந்த 4 வயது சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

வேப்பலோடை வேல்முருகன்- ஜெயா தம்பதியின் மகன் பிரபாகரன்(4). வியாழக்கிழமை மாலை பிரபாகரன் தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற வேன் எதிா்பாரதவிதமாக மோதியதில் பிரபாகரன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அப்பகுதியில் உள்ளவா்கள் சிறுவனை மீட்டு வேப்பலோடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் , செவிலியா் யாரும் இல்லாததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தாா். இதையடுத்து பிரபாகரனின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக குளத்தூா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மருத்துவமனை முற்றுகை: பிரபாகரன் உயிரிழந்ததையடுத்து ஆத்திரமடைந்த உறவினா்கள் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட மருத்துவா்கள் இல்லாததால் தான் உயிரிழப்பு நேரிட்டுள்ளது. உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என தெரிவித்து வேப்பலோடை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதையடுத்து அங்கு வந்த விளாத்திகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன், காவல் துணை கண்காணிப்பாளா் பிரகாஷ், வட்டாட்சியா் நிஷாந்தினி ஆகியோா் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், பணி நேரத்தில் பணிக்கு வராத மருத்துவா், செவிலியா்களை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும், உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணத்தொகை வழங்குவது போன்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.