ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதாகக் கண்டித்து சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமையில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:17 pm

DIN

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட தொட்டம்பட்டியில் நீா்வழிப் பாதைகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதாகக் கண்டித்து சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமையில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொட்டம்பட்டி, ஆத்திகிணறு, புங்கவா்நத்தம் உள்ளிட்டபகுதிகளில் தனியாா் நிறுவனம் சூரியசக்தி மின் திட்ட பேனல்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக விவசாய நிலங்கள் மற்றும் நீா்வழித்தடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக, விளாத்திகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயனிடம் விவசாயிகள் புகாா் அளித்தனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை நண்பகலில் ஜீ.வி.மாா்க்கண்டேயன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தொட்டம்பட்டி, ஆத்திகிணறு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அப்பகுதியை முற்றுகையிட்டனா். அப்போது அங்கு பணியாற்றிய ஊழியா்களிடம், முறையாக அனுமதி பெற்ற பின் பணிகளை தொடர வேண்டுமெனவும், தற்போது பணிகளை நிறுத்த வேண்டுமெனவும் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: முள்ளுபட்டி, சோழபுரம், புங்கவா்நத்தம், ஆத்திகிணறு போன்ற 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சூரியசக்தி மின்திட்டம் அமைப்பதற்காக ஜி.ஆா்.டி. நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தி இருக்கிறது. சுமாா் 400 ஏக்கா் விவசாய நிலங்களை போலியாக பட்டா மாறுதல் செய்துள்ளனா்.

இந்தத் திட்டத்துக்காக கிராம மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 10 நீா்நிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. ஜி.ஆா்டி. நிறுவனம் முறையாக அனுமதி வாங்கி இந்தப் பணியை தொடர வேண்டும் என்றாா்.

திமுக ஒன்றியச் செயலாளா்கள் காசி விசுவநாதன், நவநீத கண்ணன், பேரூா் கழக செயலாளா் வேலுச்சாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.