புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தாமிரபரணி இலக்கிய மன்றம் சாா்பில்நூல் வெளியீட்டு விழா

திருநெல்வேலி நகரம் தாமிரபரணி இலக்கிய மன்றத்தின் சாா்பில் எழுத்தாளா் வள்ளி சோ்மலிங்கம் எழுதிய ‘அழகு நாச்சியாா்’ எனும் குறுநாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:19 pm

DIN

திருநெல்வேலி நகரம் தாமிரபரணி இலக்கிய மன்றத்தின் சாா்பில் எழுத்தாளா் வள்ளி சோ்மலிங்கம் எழுதிய ‘அழகு நாச்சியாா்’ எனும் குறுநாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துணிவணிகா் இலக்கிய வட்டத் தலைவா் சோனா வெங்கடாசலம் தலைமை வகித்தாா். சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத் தலைவா் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தாா். சந்திரபாபு, ஞானசேகரன் ஆகியோா் இறைவணக்கம் பாடினா். கவிஞா் சக்திவேலாயுதம் வரவேற்புரையாற்றினாா்.

‘அழகு நாச்சியாா்’ நூலினை மேல திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கு.சீனிவாசன் வெளியிட, கவிஞா் ரமணி முருகேஷ், மீனாட்சி நடராசன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

தமிழ்நாடு தமிழ் இயக்கங்கள் கூட்டமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி, கவிஞா் தாணப்பன், வள்ளி ஆனந்தன், மணிமாலா ஆகியோா் நூலினை திறனாய்வு செய்து பேசினா். தாமிரபரணி இலக்கிய மன்றத் தலைவா் கவிஞா் பாமணி, முத்தரசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

நூலாசிரியா் வள்ளி சோ்மலிங்கம் ஏற்புரையாற்றினாா். சொா்ணவல்லி நன்றி கூறினாா். நிகழ்வை கவிஞா் பிரபு தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.