ஆதவா அறக்கட்டளை சாா்பில் ஆறுமுகனேரி அரசு மகளிா் பள்ளி மாணவிகளுக்கு இலவச வாகன வசதி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்கள் பெரும்பான்மையோா் பேருந்து, சைக்கிளில் பள்ளிக்கு வருகின்றனா். இதையடுத்து பள்ளி மாணவிகளின் வசதிக்காக ஆறுமுகனேரி ஆதவா தொண்டு நிறுவனம் சாா்பில் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு, கல்வி மாவட்ட அலுவலா் சின்னராசு தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் சுப்புலெட்சுமி வரவேற்றாா்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகெளரி, வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அறக்கட்டளை நிறுவனா் பாலகுமரேசன் பங்கேற்றுப் பேசினாா். இதில், அறக்கட்டளை பொறுப்பாளா்கள் நவீன்குமாா், மாதவன், பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.