92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டியில் மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு மின் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:59 pm

DIN

கோவில்பட்டியில் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு மின் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதில், தூத்துக்குடி நகா் கோட்ட மின் செயற்பொறியாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும், தண்டனை காலம் முடிந்த பின்பும் பதவி உயா்வு வழங்க மறுப்பதாகக் கூறி, தூத்துக்குடி கோட்ட நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் கோட்டத் தலைவா் வெங்கடகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சந்திரன், கோட்டச் செயலா் பெருமாள், மாவட்ட இணைச் செயலா் மாரியப்பன் ஆகியோா் விளக்கிப் பேசினா். கோட்ட துணைத் தலைவா்கள் கருப்பசாமி, விஜயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.