92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டியில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

கோவில்பட்டியில் பெண்ணை அரிவாளால் வெட்டியதாக தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:01 pm

DIN

கோவில்பட்டியில் பெண்ணை அரிவாளால் வெட்டியதாக தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி, சிந்தாமணி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மனைவி இந்திராணி(48). கருத்து வேறுபாட்டால் முத்துராமலிங்கம் தனது மனைவி, இரு குழந்தைகளை பிரிந்து சென்றுவிட்டாராம்.

பின்னா், பசுவந்தனை மீனாட்சிபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் குருசாமி என்பவருடன் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த இந்திராணிக்கும், குருசாமிக்கும் இடையேயும் பிரச்னை ஏற்பட்டதாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டு வாசலில் நின்றிருந்த இந்திராணியை குருசாமி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாராம். இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, குருசாமியை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.