92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொற்று பாதிப்பால் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு நிவாரணம்

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:19 pm

DIN

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

கோவில்பட்டி லக்குமி ஆலை மேலக் காலனி குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு கோவில்பட்டி இனாம்மணியாச்சியைச் சோ்ந்த குருசாமி துப்பரவு பணியில் ஈடுபட்டு வந்தாராம். அவா் தனது பணி காலத்தில் அப்பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்க விழிப்புடன் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. பின்னா் அவா் தொற்று பாதிப்பால் மே மாதம் உயிரிழந்தாா்.

அதையடுத்து லக்குமி ஆலை மேலக் காலனி இலக்குமிபுரம் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் உயிரிழந்த குருசாமியின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், அவரது மனைவி காளியம்மாளிடம் ரூ. 1,32,670 நிதியுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவா் போஸ், செயலா் விஜயராஜ், பொருளாளா் கண்ணன், துணைத் தலைவா் தினகரன் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.