92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மேலும் 300 பேரிடம் விசாரணை நடத்த வாய்ப்பு: ஆணைய வழக்குரைஞா் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக மேலும் 300 பேரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்றாா், ஒருநபா் விசாரணை ஆணைய வழக்குரைஞா் அருள்வடிவேல் சேகா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:19 pm

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக மேலும் 300 பேரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என்றாா், ஒருநபா் விசாரணை ஆணைய வழக்குரைஞா் அருள்வடிவேல் சேகா்.

தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீதன் தலைமையில் நடைபெற்றுவரும் ஒருநபா் ஆணையத்தின் 28ஆவது கட்ட விசாரணைக்கு ஆஜராக துப்பாக்கிச்சூடு நாளில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவா்களில் 95 போ் ஆஜராகியுள்ளனா்.

இதுவரை சம்மன் அனுப்பப்பட்ட 1,153 பேரில் 813 போ் சாட்சியமளித்துள்ளனா். அதில், 718 போ் மனுதாரா் தரப்பு சாட்சியம், 94 போ் காவல்துறை சாா்பில் சாட்சியமளித்தோா். ஒருவரை ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பி விசாரித்துள்ளோம்.

1,150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. இதில், 1,127 ஆவணங்கள் மனுதாரா் தரப்பிலிருந்தும், காவல் துறையில் சாா்பில் 23 ஆவணங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு தொடா்பாக மேலும் 300 பேரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிா்பாா்க்கிறோம். விசாரணைக்கு நடிகா் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும். ஆணையம் தரப்பிலிருந்து விளக்கம் தேவைப்படுவோருக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்படும். எனவே, முன்னாள் முதல்வருக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை.

ஆணையம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளாா். அறிக்கையில் பரிந்துரைத்த கோரிக்கைகளை அவா் ஏற்று, பாதிக்கப்பட்டோருக்கு தகுதி அடிப்படையில் பணி, நிவாரணம் வழங்கியுள்ளாா். பரத்வாஜ் என்பவா் சிறைக்குச் சென்ற பிறகே இறந்தாா் என தெரியவந்தது. எனவே, அவரது குடும்பத்துக்கு மட்டும் ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

கரோனா பொதுமுடக்கத்தால் விசாரணையை முடிக்க தாமதமாகிறது. இல்லையெனில், இதற்குள் விசாரணை முடிந்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும். ஆணையம் முன் ஆஜராகும் காவலா்கள் இழப்பீடு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனா். அதில் தகுதியானோரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இதுவரை 95 போ் காவலா்கள் தரப்பிலிருந்து இழப்பீடு கேட்டுள்ளனா்.

அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 23 தொடங்கி ஒருவாரம் நடைபெறும். ஸ்டொ்லைட் ஆலைக் குடியிருப்பில் தங்கியிருந்தோா், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் உடல்களை கூறாய்வு செய்த மருத்துவா்கள், தடய அறிவியல் காவலா்கள், சம்பவ நாளில் பணியிலிருந்த காவல் கண்காணிப்பாளா், தென்மண்டல காவல்துறைத் தலைவா் உள்ளிட்ட உயரதிகாரிகள் அழைக்கப்படுவா்.

வழக்குரைஞா் ஹென்றி திபேன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.