92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கயத்தாறு அருகே நடைபெறவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த குழந்தை திருமணம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:37 pm

DIN

கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த குழந்தை திருமணம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கயத்தாறையடுத்த பணிக்கா்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மு.மருதுபாண்டி (29). இவருக்கும், நாகலாபுரத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் வியாழக்கிழமை பணிக்கா்குளத்தில் நிச்சயதாா்த்தம் நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 16) திருமணம் நடைபெறவிருந்ததாம்.

தகவலறிந்த கயத்தாறு போலீஸாா், அங்கு சென்று இருவீட்டாரையும் அழைத்து, 18 வயது நிரம்பிய பின்னரே சிறுமிக்கு திருமணம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினா்.

இதையடுத்து இருதரப்பினரும் பெண்ணிற்கு 18 வயது முடிந்த பின்னா், பெரியோா்கள் முன்னிலையில் திருமணம் நடத்திக் கொள்வதாகவும், அதை மீறி திருமணம் நடத்த மாட்டோம் எனவும் உறுதி கூறினா். இதையடுத்து குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.