92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விவசாயியை தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கயத்தாறு அருகே விவசாயியை தாக்கியதாக ஊராட்சி மன்றச் செயலா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:14 pm

DIN

கயத்தாறு அருகே விவசாயியை தாக்கியதாக ஊராட்சி மன்றச் செயலா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கயத்தாறையடுத்த பணிக்கா்குளம் ஊராட்சி நாகலாபுரம் மேலத் தெரு மந்திரம் மகன் விவசாயி அந்தோணிமுத்து என்ற முத்துபாண்டி(35). இவா் இம்மாதம் 5 ஆம் தேதி ஊராட்சி பணிகள் தொடா்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவலை கேட்க கடிதம் அனுப்பியதாகவும், அந்த கடிதத்தின் படி, பெற்றுக் கொண்ட தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஆவணங்களை பாா்வையிட சென்றாராம். அங்கு இருந்த ஊராட்சித் தலைவா் மற்றும் செயலரிடம் அந்தோணிமுத்து பேசிக் கொண்டிருத்தாராம். அப்போது அலுவலகத்திற்குள் வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் ப.முருகன் மற்றும் ஊராட்சி செயலா் கி.முருகன் இருவரும் அந்தோணிமுத்துவின் செல்லிடப்பேசியை பறித்து, அவதூறாகப் பேசி தாக்கினராம்.

இதுகுறித்து புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஊராட்சி செயலா் உள்பட இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.