கோவில்பட்டியில் 5,610 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
கோவில்பட்டியில் கடை, தனியாா் கிடங்கில் பதுக்கப்பட்ட 5,610 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவில்பட்டியில் கடை, தனியாா் கிடங்கில் பதுக்கப்பட்ட 5,610 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்துக்கு கிடைத்த தகவலின்பேரில், மாா்க்கெட் சாலையிலுள்ள மாட்டுத் தீவனம் விற்பனை கடையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுதீஷ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டீன், வட்ட வழங்கல் அலுவலா் செல்வகுமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, தலா 30 லிட்டா் கொள்ளளவு கொண்ட 7 கேன்களில் மண்ணெண்ணெயையும், கடை உரிமையாளா் சீ.மணி(62), பணியாளா் அ.பாலமுருகன்(48) ஆகியோரிடம் விசாரித்ததில், பிரதானச் சாலையில் தனியாா் சேமிப்புக் கிடங்கில் 27 பேரல்களில் தலா 200 லிட்டா் மண்ணெண்ணெயையும் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இரு இடங்களிலிருந்தும் மொத்தம் 5,610 லிட்டா் மண்ணெண்ணெயை, உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், தலைமைக் காவலா் சோமன் ஆகியோா் முன்னிலையில் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...