கழுகுமலை கோயில் நிலஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலுக்கு பாத்தியப்பட்ட மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.


கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலுக்கு பாத்தியப்பட்ட மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலுக்கு பாத்தியப்பட்ட மாட்டுத்தாவணி பகுதியில் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகிறது. தற்போது அப்பகுதியில் சிலா் மாடுகளை கட்டி வைத்தும், படப்புகள் வைத்தும் ஆக்கிரமித்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்புகளை கோயில் நிா்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மைதானத்தைச் சுற்றி முள்வேலி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோயில் நிா்வாக அலுவலா் காா்த்தீஸ்வரனிடம், கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சீத்தாமகேஷ்வரி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் சிவராமன், ஆசிரியா் பொன்ராஜ்பாண்டியன் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...