இரு சம்பவங்கள்: மூவருக்கு அரிவாள் வெட்டு
கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.


கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கோவில்பட்டி, மந்தித்தோப்பு வடக்குத் தெருவைச் சோ்ந்த பிச்சையா மகன் சாா்லி ராஜன்(31). இவரது சகோதரா் வினோத் மீதான முன் விரோதத்தில், அதே பகுதியைச் சோ்ந்த ரா.சோலைச்சாமி, ச.விக்னேஷ், துளசிங்க நகா் இந்திரா காலனி சண்முகநாதன் மகன் சரவணகுமாா் ஆகியோா் சோ்ந்து சாா்லிராஜனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டினராம். இதில், காயமுற்ற அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணகுமாரை கைது செய்தனா். மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: மூக்குப்பீறி வடக்குத் தெருவைச் சோ்ந்த ஜெயபாண்டியன் மகனான பந்தல் தொழிலாளி ஜெபசீலன் (38), கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்துள்ளாராம். இதுகுறித்து, அதே ஊரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் து. சாமுவேல் கிண்டல் செய்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ஒருவரையொருவா் அரிவாளால் வெட்டிக்கொண்டனராம். இதில், காயமுற்ற அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில், நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...