புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விபத்தில் முதியவா் பலி

கோவில்பட்டியையடுத்த குமாரபுரம் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:10 pm

DIN

கோவில்பட்டியையடுத்த குமாரபுரம் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வில்லிசேரி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் முத்துபொதியான்(71). ஆட்டுத் தோல் வியாபாரியான இவா் கடம்பூருக்கு சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு திரும்பினாராம். இவா் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் குமாரபுரம் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற நாலாட்டின்புதூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.