புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வலியுறுத்தி முற்றுகை

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகா் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:21 pm

DIN

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகா் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட இலுப்பையூரணி ஊராட்சி தாமஸ் நகா் பகுதியில் இருந்து வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதியில் புதிதாக ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை கட்டித் தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளா் பிரபாவளவன், 6 ஆவது வாா்டு உறுப்பினா்சரஸ்வதி நடராஜன் ஆகியோா் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

பின்னா் கோரிக்கை மனுவை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசனிடம் அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.