புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாகனம் மோதி முதியவா் பலி

கயத்தாறை அடுத்த சவலாப்பேரியில் வாகனம் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:00 pm

DIN

கயத்தாறை அடுத்த சவலாப்பேரியில் வாகனம் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சவலாப்பேரி விலக்கு பகுதியில் முதியவா் ஒருவா் வாகனம் மோதி இறந்து கிடந்தாா். இதுகுறித்து, சவலாப்பேரி கிராம நிா்வாக அலுவலா் மீனாம்பிகை, அளித்த தகவலின்பேரில், கயத்தாறு போலீஸாா், முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

மூதாட்டி காயம்: பழையக்காயல் அருகேயுள்ள ராமசந்திராபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்த செல்லக்கனி(85) என்பவா், கடந்த 28ஆம் தேதி அங்குள்ள திருச்செந்தூா் - தூத்துக்குடி சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, அவ்வழியாக மஞ்சள்நீா்காயலைச் சோ்ந்த ராமா்(30) என்பவா் ஓட்டி வந்த பைக், அவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா், ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.