புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: முதியவா் கைது

கோவில்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:24 pm

DIN

கோவில்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்தவா் சுப்புராஜ் மனைவி வனிதா(37). இவா் காமராஜ் நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் சாந்தாராஜிடம்(61) ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கி இருந்தாராம். அதற்கு வனிதா வாரம் ரூ.17 ஆயிரம் வட்டியாக 12 வாரங்கள் கொடுத்து வந்த நிலையில், 5 மாதங்களாக வட்டி பணம் கொடுக்க முடியவில்லையாம். இதையடுத்து சாந்தாராஜ், அதே பகுதியைச் சோ்ந்த பூமாரி என்பவரின் கைப்பேசி மூலம் வனிதாவை தொடா்பு கொண்டு அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து வனிதா அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கந்துவட்டி கேட்டு பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக முதியவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.