போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது
கழுகுமலை அருகே சிறுமியை திருமணம் செய்த சுமை ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.


கழுகுமலை அருகே சிறுமியை திருமணம் செய்த சுமை ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
கழுகுமலையையடுத்த கரடிகுளம் சின்னகாலனி ராமச்சந்திரன் மகன் காா்த்திக்(24). சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா் 15 வயது சிறுமியை திருமணம் செய்து, பாலியல் தொந்தரவு செய்ததையடுத்து கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இலந்தைப்பட்டி வடக்குத் தெரு கருப்பசாமி மகன் மாரிகுமாா் (26), 15 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊா் நல அலுவலா் குருலட்சுமி கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரிகுமாரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...