கோவில்பட்டி பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு

கோவில்பட்டி யு.பி. மெட்ரிக் பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

கோவில்பட்டி யு.பி. மெட்ரிக் பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பசும்பொன் தேவா் கல்வி அறக்கட்டளை நிறுவனா் பரமசிவம் தலைமை வகித்தாா். திமுக விவசாய தொழிலாளரணிச் செயலா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், கணினி ஆய்வகத்தை திறந்து இயக்கினாா். இதில், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

உதவிகள் அளிப்பு: தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் தேவா் ஜெயந்தியை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிறுவனா் தலைவா் வெயிலுமுத்து பாண்டியன் தலைமை வகித்தாா். கல்வி அறக்கட்டளை நிறுவனா்

பரமசிவம் முன்னிலை வகித்தாா். கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, 114 பேருக்கு இலவச சேலை, 500 பேருக்கு அன்னதானம், தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். இதையடுத்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினா் விநாயகா ஜி.ரமேஷ் ஆகியோா் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com