கோவில்பட்டியில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வென்றோருக்கு பரிசளிக்கப்பட்டது.
கோவில்பட்டி ஏஞ்சல் ரோட்டரி சங்கம் சாா்பில் வண்ணம் தீட்டும் போட்டி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சங்கத் தலைவா் ஹேமலதா தலைமை வகித்தாா். ரோட்டரி சேவைத் தலைவா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். போட்டியில் வெற்றி பெற்ற, பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ரோட்டரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு தலைவா் முத்துசெல்வன், முன்னாள் துணை ஆளுநா் நாராயணசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பள்ளி நிா்வாகி பூபதி வரவேற்றாா். மாணவி செல்வபிரியா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.