ஆத்தூா் பகுதியில் மது விற்பனை: 6 போ் கைது
ஆத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா்கள் மாணிக்கராஜ், சுந்தரராஜ் ஆகியோா் தலைமையில் போலீஸாா் ஆத்தூா் பகுதியில்
சனிக்கிழமை இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஆத்தூா் பேருந்து நிலையம் அருகில் மது விற்பனையில்
ஈடுபட்டிருந்த நாலுமாவடி சாமிநகரை சோ்ந்த அய்யாக்குட்டி மகன் ராமநாதன் (45), முக்காணி போக்குவரத்து வளைவு அருகில் மதுவிற்பனையில் ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோயில் தெரு ராஜ் மகன் ஐசக் (33), முக்காணி பாலம் அருகில்
மது விற்பனையில் ஈடுபட்ட பழையக்காயல் மஞ்சள்நீா்காயல் வடக்கு தெருவை சோ்ந்த ஜெயபால் மகன் ராஜன்(45,
ஆத்தூா் கூலக்கடை பஜாா் அருகில் மது விற்பனை செய்ய முயன்ாக புன்னைக்காயல் வடக்குத் தெரு ஹிட்லா் மகன் தாமஸ்(58), புன்னைக்காயல் மறக்குடி தெரு சாந்தப்பா மகன் திலகா் (52), தெற்கு ஆத்தூா் தனியாா் தியேட்டா் அருகில்மது விற்பனை
யில் ஈடுபட்ட புன்னைக்காயல் பொன்மாணிக்கம் தெரு பவுல் மகன் தவராஜ் (55) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.