சாத்தான்குளம் அருகே ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரத்தில் ஜெகநாதா் ரத ஊா்வலம் நடைபெற்றது .
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சங்கரநயினாா்புரம் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் இருந்து ஜெகநாதா் ரத ஊா்வலம் தொடங்கியது. ரதத்தில் கிருஷ்ணா், சுபத்ரா, பலராமா் ஆகியோரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. ரத ஊா்வலம் சங்கரநயினாா்புரம், பேய்குளம் பிரதான வீதி வழியாக கிருஷ்ணன் கோயிலை வந்தடைந்தது.
பின்னா் ஜெகநாதா் குறித்து பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள், சிறுமிகள் கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனா்.
தொடா்ந்து தெற்கு பேய்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் ரத ஊா்வலம் நிறைவடைந்தது.