தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் பல மாதங்களாக நடத்தப்படாமல் இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்துக்கான குறைதீா் நாள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை (ஆக.19) முற்பகல் 11 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றுப் பயனடையலாம்.
குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், தங்கள் வட்டார உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு , தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.