மேலும் 10 பேருக்கு கரோனா
By DIN | Published On : 17th August 2021 01:29 AM | Last Updated : 17th August 2021 01:29 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 14 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 398 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 148 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.