எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆணையம் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையம் விசாரணையை நீண்டித்து கொண்டே செல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஹென்றி திபேன் விசாரணை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

News image

வழக்கறிஞர் ஹென்றி திபேன்.

Updated On :23 ஆகஸ்ட் 2021, 1:07 pm IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையம் விசாரணையை நீண்டித்து கொண்டே செல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஹென்றி திபேன் விசாரணை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 29-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கிய நிலையில் 5-நாள்கள் நடைபெறும் விசாரணைக்காக 58-பேருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.  இதில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று ஆணையம் முன்பாக ஆஜராகி விளக்கமளிக்க வந்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தூத்துக்குடி துப்பாக்கி-சூடு சம்பவம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஆணையத்தின் விசாரணை முடிக்கப்படாமல் ஒவ்வொரு முறையும் ஆணையம் தரப்பில் கால நீட்டிப்பு கேட்டு வருகின்றனர். 

அதைபோல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 2018-ம் ஆண்டு பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி வழங்கியதாக கூறப்படும் தாசில்தார்கள் யாரையும் விசாரணை செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் விசாரணையை நீட்டித்து கொண்டே செல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஹென்றி திபேன் விசாரணை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார்.  மேலும் சிபிஐ நீதி அளிக்கவில்லை, நஷ்டஈடு நீதி கொடுக்காது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் சிறைக்கு சென்று இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.