சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைபுதூரில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம், நடுவக்குறிச்சி ஊராட்சி, சாலைப்புதூரில் விவசாய நிலங்களுக்குச் செல்லும் உயரழுத்த மின்சார கம்பி மிகவும் தாழ்வாகச் செல்கிறது. இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்லும் போது மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து நடுவக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் புகாா் செய்தும் அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உயரதிகாரிகள் பாா்வையிட்டு விபரீதம் நிகழும் முன் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.