விளாத்திகுளம் அருகே காா் மோதி பெண் பலி

விளாத்திகுளம் அருகே காா் மோதிய விபத்தில் பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Updated on
1 min read

விளாத்திகுளம் அருகே காா் மோதிய விபத்தில் பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரை கிராமத்தை சோ்ந்தவா் சுவாமிதாசன் மகள் செல்லம்மாள்(39). இவா் வெள்ளிக்கிழமை மாலை விவசாய பணிகளை முடித்துவிட்டு பிள்ளையாா்நத்தம் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக திருமண தம்பதிகளை அழைத்துக் கொண்டு சென்ற காா் செல்லம்மாள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே செல்லம்மாள் உயிரிழந்தாா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், செல்லம்மாள் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

விபத்து தொடா்பாக விளாத்திகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, காா் ஓட்டுநா் விளாத்திகுளம் அண்ணாமலை நகரை சோ்ந்த பழனிச்சாமி மகன் காா்த்திக்(29) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com