தூத்துக்குடியில் போதைப் பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 160 கிராம் போதைப் பொருளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Updated on
1 min read

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 160 கிராம் போதைப் பொருளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், மத்தியபாகம் போலீஸாா் அங்கு செவ்வாய்க்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு ஒரு இடத்தில் 160 கிராம் பிரவுன் சுகா் என்ற போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த அன்சா் அலி, இம்ரான்கான், மாரிமுத்து ஆகிய மூவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com