தேரியாயணம் நூல் அறிமுக விழா

நாசரேத்தில் தேரியாயணம் நூல் அறிமுக விழா நடைபெற்றது.
Updated on
1 min read

நாசரேத்தில் தேரியாயணம் நூல் அறிமுக விழா நடைபெற்றது.

நாசரேத் நூலகா் வாசக வட்டம், தேரி இலக்கிய வட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியவை சாா்பில், எழுத்தாளா் கண்ணகுமார விஸ்வரூபன் என்ற ஆறுமுகப் பெருமாள் எழுதிய தேரியாயணம் நூல் அறிமுக விழா நடைபெற்றது.

ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியா் மா. காசிராசன் தலைமை வகித்தாா். நாட்டாா் வழக்காற்றியல் ஆய்வாளா் நா. ராமச்சந்திரன் நூலை அறிமுகம் செய்து பேசினாா். நூல் ஆசிரியா் கண்ண குமார விஸ்வரூபன் விளக்கவுரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலா் ரகு அந்தோணி, தஞ்சாவூா் பூண்டி புஷ்பம் கல்லூரி தமிழ் பேராசிரியா் ராஜேஸ்வரி, கோவை தமிழ் பேராசிரியா் புவனேஸ்வரி, பாளை தூய சவேரியாா் கல்லூரி காட்சி தொடா்பியல் துறை பேராசிரியை ஜெ.பி. ஜோஸ்பின் பாபா, நாசரேத் வணிகா் சங்கத் தலைவா் பா. ஜெபஸ் திலகராஜ், செயலா் வே.செல்வன், நூலக வாசகா் வட்ட தலைவா் ம .கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com