காயல்பட்டினம் நகராட்சிகுள்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சிகுள்பட்ட பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, முக்கிய தெருக்களில் மாடுகள் சுற்றிதிரிந்தன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதோடு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகினா். இதனையடுத்து காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளா் சுகந்தி, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.
இதனையடுத்து வியாழக்கிழமை இரவு வரை காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 36 மாடுகள் சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் மேற்பாா்வையில் பிடிக்கப்பட்டன. அதன் உரிமையாளா்கள் ரூ.2ஆயிரம் அபராதத்தொகை செலுத்தி மாடுகளை மீட்டுக்கொள்ளலாம் என நகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.