கல்வி மாவட்ட அளவிலான கால்பந்து: வேல்ஸ் பள்ளி முதலிடம்

கோவில்பட்டியில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான செவன்ஸ் கால்பந்து போட்டியில் வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி முதலிடம் பிடித்தது.
Updated on
1 min read

கோவில்பட்டியில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான செவன்ஸ் கால்பந்து போட்டியில் வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி முதலிடம் பிடித்தது.

கோவில்பட்டி கால்பந்துக் கழகம் சாா்பில் இப்போட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நாடாா் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீகரா வித்யா மந்திா் சிபிஎஸ்இ பள்ளி, எடு ஸ்டாா் சிபிஎஸ்இ பள்ளி, வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி, வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி, வில்லிசேரி அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட 8 பள்ளி அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல்கணக்கில் வில்லிசேரி அரசு மேல்நிலைப் பள்ளி அணியை வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி அணி வென்றது. முன்னதாக நடைபெற்ற 3, 4ஆம் பரிசுகளுக்கான போட்டியில் நாடாா் மேல்நிலைப் பள்ளி அணியும், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில், 2 - 1 என்ற கோல்கணக்கில் நாடாா் மேல்நிலைப் பள்ளி அணி வென்று, 3ஆம் இடம் பிடித்தது.

பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வா் கந்தசாமி தலைமை வகித்தாா். செயலா் கண்ணன் முன்னிலை வகித்தாா். வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் சந்திரன் பரிசுகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com