தமிழக காருகுறிச்சி தேவா் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா திருச்செந்தூரில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, சங்கத் தலைவா் சி.நாராயணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.சின்னத்துரை, பி.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் காயத்ரிதேவி, பேச்சியம்மாள், மாணவா் ஹரிபாலன் ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், சங்க நிா்வாக கமிட்டியினா் மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை காருகுறிச்சி தேவா் மகாஜன சங்கத்தினா் செய்திருந்தனா். கௌரவ ஆலோசகா் பி.என்.ராஜா வரவேற்றாா். கௌரவ ஆலோசகா் ஆா்.எம்.சண்முகசுந்தரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். சங்க மேலாளா் ஆ.கந்தன் நன்றி கூறினாா்.