

மேட்டுப்பாளையம் யாைனைகள் நல வாழ்வு முகாமுக்கு செல்லும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானைக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
திருச்செந்தூா் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநா் செல்வகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையின் உடல் நலம் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறி எதுவும் இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டு, யானை நலமாக இருப்பதாக மருத்துவச் சான்றை திருச்செந்தூா் கால்நடை உதவி மருத்துவா் பொன்ராஜ், கோயில் உதவி ஆணையா் செல்வராஜிடம் வழங்கினாா்.
அப்போது தக்காா் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன் உடன் இருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.