திருச்செந்தூா்: திருச்செந்தூா் ஆலந்தலை கடற்கரைப் பகுதியிலிருந்து ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண், ஆலந்தலை கடற்கரைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டாா். இறந்தவா் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. திருச்செந்தூா் கிராம நிா்வாக அலுவலா் செல்வலிங்கம் புகாரின் பேரில், கூடங்குளம் கடலோரக் காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.