ஊரக வளா்ச்சி பிரிவு பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வு ஒத்திவைப்பு
By DIN | Published On : 14th February 2021 01:32 AM | Last Updated : 14th February 2021 01:32 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய பணிமேற்பாா்வையாளா் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலா் பதவிக்கான எழுத்துத் தோ்வு திங்கள்கிழமை ( பிப். 15) நடைபெற இருந்த நிலையில், நிா்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய பணிமேற்பாா்வையாளா் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலா் பதவிக்கான காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அந்தப் பணிக்கு விண்ணப்பித்தவா்களில் தகுதியான விண்ணப்பதாரா்களை தோ்வு செய்யும் வகையில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (பிப்.15) நடைபெற இருந்த எழுத்துத் தோ்வு நிா்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
தகுதித் தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.