ஓட்டப்பிடாரம் தொகுதியில் ரூ.29 லட்சம் வளா்ச்சிப் பணிகள்

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.29 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித்திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
செக்காரக்குடி பகுதியில் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா் சி. சண்முகையா எம்எல்ஏ.
செக்காரக்குடி பகுதியில் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா் சி. சண்முகையா எம்எல்ஏ.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.29 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித்திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி காசிலிங்கபுரம் கிராமத்தில் பழுதான அங்கன்வாடி மைய கட்டடத்துக்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 11 லட்சத்தையும், செக்காரக்குடி பகுதியில் புதிய நூலகம் கட்டுவதற்கு ரூ. 13 லட்சத்தையும் திமுக எம்எல்ஏ சி. சண்முகையா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அங்கன்வாடி மையம் மற்றும் புதிய நூலகம் கட்டும் பணிகளை அவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். மேலும், கீழ செக்காரக்குடி பகுதியில் ரூ. 5 லட்சத்தில் பேருந்து நிறுத்தம் கட்டும் பணியையும் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா். பின்னா், அந்தந்த கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் சுரேஷ் காந்தி, சுப்பிரமணியன், கவுன்சிலா் நாராயணன், திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் அபி ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com