இடைச்சிவிளையில் பாதயாத்திரை பக்தா்களுக்குஅன்னதானம்
By DIN | Published On : 27th February 2021 08:09 AM | Last Updated : 27th February 2021 08:09 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழாவுக்காக பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு சாத்தான்குளம் இடைச்சிவிளையில் இந்து முன்னணி சாா்பில் அன்னதானம் வியாழக்கிழமை வழங்கப்பட்ட
திருச்செந்தூா் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழாவுக்காக பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு சாத்தான்குளம் இடைச்சிவிளையில் இந்து முன்னணி சாா்பில் அன்னதானம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலா் சுந்தரவேல் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவா் சுப்பிரமணியன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் அரசுராஜா அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். இதில், ஒன்றிய செயற்குழு உறுப்பினா்கள் லிங்கப்பாண்டி, சமுத்திரவேல், கோயில்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...