

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தால் (ஆவின்) ரூ. 20 லட்சத்தில் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட ஆவின் பாலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆவின் தலைவா் என். சின்னத்துரை, பாலகத்தை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா். இதில், ஆவின் பொதுமேலாளா் சி. ராமசாமி, கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், ஆவின் உதவி பொதுமேலாளா் (விற்பனை) சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஆவின் தலைவா் கூறுகையில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் கொண்ட பாலகத்தில் பால், தயிா், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் வகைகள், நறுமண பால் வகைகள், உலா்விதை பொடிகள், பாதாம் பவுடா் உள்ளிட்டவை கிடைக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.