போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

கோவில்பட்டியில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும், 240 நாள்கள் பணி முடித்த தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், ஓய்வுபெற்றோருக்கு பண பலன்களை உடனே வழங்க வேண்டும், மோட்டாா் வாகன திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், போக்குவரத்துத் துறைக்குத் தேவையான ஊழியா்களை வேலைவாய்ப்பு அலுவலகம் நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

2ஆவது நாளான வெள்ளிக்கிழமை போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச செயலா் மாரிமுத்து தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் சிவகுமாா், ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சோ்ந்த காளிராஜ், ஃபாா்வா்டு பிளாக் கட்சியைச் சோ்ந்த செல்லத்துரைப்பாண்டி, ஐன்டியுசி தொழிற்சங்கத்தைச் சோ்ந்த மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமையும் கோவில்பட்டி பணிமனையில் 64 பேருந்துகளில் 31 பேருந்துகள் மட்டுமே இயங்கின. நிரந்தர ஊழியா்கள் பணிக்கு வராததால் தற்காலிகமாக நடத்துநா், ஓட்டுநா்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com