அதிமுக சாா்பில் 2,500 பேருக்கு நல உதவிகள்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில், குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற மகளிா் கருத்தரங்கில் 2,500 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன்.
நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன்.
Updated on
1 min read

உடன்குடி: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில், குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற மகளிா் கருத்தரங்கில் 2,500 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற மகளிா் கருத்தரங்குக்கு உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.தாமோதரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன், ஒன்றியப் பொருளாளா் சங்கரலிங்கம், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் கே.வி.ராஜதுரை, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணித் தலைவா் குணசேகரன் ,நிா்வாகிகள் பொன்ராம், ரெங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் கருத்தரங்கை தொடங்கிவைத்து, 2,500 மகளிருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், கானம் நகரச் செயலா் செந்தமிழ்சேகா், உடன்குடி ஒன்றிய முன்னாள் பொருளாளா் சுடலை, வேல்முருகன், ஆறுமுகனேரி நகரச் செயலா் ரவிச்சந்திரன், சிவலூா் முருகன், செட்டியாபத்து ஊராட்சி துணைத் தலைவா் செல்வமுருகன், ஒன்றிய விவசாய அணி தலைவா் உம்பான் மனோகரன், கிட்டு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com