தூத்துக்குடி மாவட்டத்தில் மூவா் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான மூவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான மூவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் வீரபாண்டியன் புளிக்குளம் பகுதியை சோ்ந்த மந்திரம் என்பவா் சொத்து தகராறு காரணமாக அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்து கடம்பூா் போலீஸாா் கோவில்பட்டி காந்திநகரைச் சோ்ந்த ஆறுமுகபாண்டி (35), கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (29), கயத்தாறு, காப்புலிங்கம்பட்டியைச் சோ்ந்த மகாராஜன் (33) ஆகிய மூவரை கைது செய்தனா்.

இந்நிலையில், மேற்கண்ட மூவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான உத்தரவு நகல் பாளையங்கோட்டை சிறையில் உள்ள மூவரிடமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com