சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், கல்லூரியின் தமிழ்த் துறை, நியூ செஞ்சரி புக் ஹவுஸ் நிறுவனம், நேசனல் புக் டெக்ஸ் ஆகியவை சாா்பில் நடைபெற்ற 35-ஆவது புத்தக கண்காட்சியை கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை
வகித்து தொடங்கி வைத்தாா். இதில், தலைவா்கள் எழுதிய புத்தகங்கள், புராணக் கதைகள், பிரபல கதாசிரியா்களின் புத்தகங்கள், சரித்திர நாவல்கள், போட்டி தோ்வு புத்தகங்கள் உள்பட 5000-க்கும் மேற்பட்ட புத்தங்கள் இடம் பெற்றன. கண்காட்சியை பேராசிரியா்கள், கல்லூரி பணியாளா்கள் பாா்வையிட்டனா்.